தொண்டன்
தொண்டன்
நேரம்: 5 மணி.
சுரேஷ் சுரேஷ் என்று ஒரு குரல் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால் செல்வி. “எங்கம்மா உன் வீட்டுக்காரரு” என்று ஒருவன் கேட்டான் அவனுடன் இருந்த மற்ற ஐந்து பேரும் “அவனை கூப்பிடு” என்று கேட்டனர். அதற்கு செல்வி “அவர் இப்பதான் வேலைக்கு போயிட்டு வந்தாரு சாப்பிட்டு வருவாரு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஓரம்போ என்று சொல்லிவிட்டு வீட்டின் வெளியே நிற்கும் ராமை பார்த்து “துண்டு எடுத்துட்டு வந்தியா அது இருந்தா தான் மரியாதை” என்று கேட்டான். அதற்கு ராம் “எப்ப கட்சிக்கு ஓட்டு கேக்க போறோம் கட்சி துண்டு இல்லாமையா போறது வந்துட்டேன்” என்று கூறினான். அப்போ சரி “நான் போயிட்டு வரேன்” என்று செல்வியிடம் கூறிவிட்டு அந்த ஐவருடன் கிளம்பினான் சுரேஷ். “சாப்பிட்டு போங்க” என்றால் செல்வி “ஏண்டி தலைவனுக்கு ஓட்டு கேட்குறது முக்கியமா இல்ல ஒருவேளை சோறு முக்கியமா?” என்று சொல்லிவிட்டு கிளம்பி நான் சுரேஷ். “ இவர் எங்க தலைவர் தலைவர் சொல்லிட்டு திரிகிறார் ஆனால் இவர் யாருன்னே அவருக்கு தெரியப்போவதில்லை” என்று முனங்கியபடியே வீட்டுக்குள் சென்றால் செல்வி.
*5 மணி நேரத்திற்கு பின்*
. சுரேஷ் வீடு திரும்பினான் “செல்வி சாப்பாடு போடு” என்றான். செல்வி சாப்பாடு எடுத்து வந்து பரிமரத் தொடங்கினாள். சுரேஷ் சாப்பிட தொடங்கும் போது வெளியில் இருந்து “டேய் சுரேஷ் வெளியே வாடா” என்று ஒருவன் கோபமாக கூப்பிட வெளியே வந்து பார்த்தான் அது எதிர்க்கட்சி தொண்டனான ராஜேஷ். ராஜேஷ் சுரேஷின் சட்டையை பிடித்து “ஏண்டா ஓட்டு கேட்க போனா ஓட்டு மட்டும் தான் கேட்கணும் அத விட்டுட்டு ஏண்டா எல்லார்கிட்டயும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சிருக்க” என சொல்லி சுரேஷ் அறைந்தான் ராஜேஷ். “ நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லல” . என்றான் சுரேஷ் ஆனால் ராஜேஷ் அவனை நம்பாமல் சுரேஷை அறைந்தான். தடுக்க வந்த செல்வியை ராஜேஷ் தள்ளி விட அவளுக்கு தலையில் காயமானது. அதைப் பார்த்த சுரேஷ் மிகுந்த கோபத்திற்கு உள்ளானான் இரண்டு பேரும் மாறி மாறி அடித்துக் கொள்ள அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து அவர்களைப் பிரித்து ராஜேஷை கூட்டி சென்றனர்.
* மறுநாள்*
செல்விக்கு பக்கத்து தெருவில் இருக்கும் தோழியான சரண்யா போன் செய்தால். செல்வி, எங்கே போன எடுத்தாள் நேற்று இரவு நடந்ததை பற்றி கேட்கப் போகிறாள் என்று எண்ணி போனை எடுக்கவில்லை ஆனால் சரண்யா மீண்டும் மீண்டும் அழைக்க, செல்வி போனை எடுத்து பேசினாள்.
“ ஏய் செல்வி இங்க ராஜேஷ் நண்பர்களும் இன்னும் சில பேரும் கத்திக்கொம்பு எல்லாம் எடுத்துக்கொண்டு உன் வீட்டை நோக்கி தான் வருகிறார்கள்” என்று கூறினாள். உடனே செல்வி அவளின் மகனை தூக்கிக் கொண்டும் சுரேஷை அழித்துக் கொண்டும் ஊரை விட்டு ரயிலில் சென்றனர். செல்லும் வழியில் அவர்களின் மகன் “எங்கம்மா போறோம்” எனக் கேட்டான். அதற்கு அவள் “ உன் தாத்தா வீட்டுக்கு டா” என்றாள் . அதற்கு அவன் “ தாத்தா வீட்டுக்கா நீங்க கல்யாணம் பண்ணதே புடிக்காம தானே அவரே உங்கள வீட்டை விட்டு துரத்தினார்னு சொன்னீங்க அப்புறம் இப்ப ஏன் அங்க போறோம்” என்றான். “ அதற்கு அவள் இப்போ அவங்களை தவிர நமக்கு யாரும் இல்ல அதான்” என்றால்.
அன்று இரவு கோபாலன் விளையாட்டாக ராஜஸிடம் சொன்ன ஒரு பொய் சுரேஷ் குடும்பத்தின் நிலையே மாற்றிவிட்டது.
*முடிவு*
