சிற்பங்கள் பின்னமாகும்போது
சிற்பங்கள் பின்னமாகும்போது


சிற்பங்கள் பின்னமாகும்போது, அதாவது உடைந்துபோகும்போது, அவற்றின் கடவுள் தன்மை நீங்கிவிடும். இதுதான் மரபு. அந்த நிமிடத்திலிருந்தே அச்சிலையானது வெறும் கல்லாக அல்லது உலோகமாக ஆகிவிடுகிறது. அது கடவுள் கிடையாது. இந்திய மரபின்படி, இந்த வெறும் கல், உலோகம் அழிக்கப்படவேண்டும். குன்றின்மீது செதுக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் மேற்கொண்டு வழிபாடு தொடராது. கற்சிலையாக இருந்தால் குளத்திலோ, கிணற்றிலோ போட்டுவிடுவார்கள். உலோகமாக இருந்தால் அதனை உருக்கி, அடுத்த சிலையைச் செய்யப் பயன்படுத்திக்கொள்வார்கள். மரமோ, சுதையோ நாளடைவில் அழிந்து நமக்குக் கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது. அல்லது யாருக்காவது விறகாகக்கூடப் பயன்பட்டிருக்கலாம். ஆக, மரபின்படி, அது கடவுளா அல்லது வெறும் பொருளா என்பதை அதன் முழுமை மற்றும் ஆகம முறைப்படியான ஒரு வழிபாட்டிடத்தில் அது இருக்கிறதா, அதற்கு ஆகமச் சடங்குகள், குடமுழுக்கு ஆகியவை நடந்துள்ளதா என்பதைப் பொருத்ததே ஆகும்.