வாழ்க்கை நெறி
வாழ்க்கை நெறி
தான் கற்றதை
பிறருக்கு எடுத்துரைக்காமல் போனால் முழுமை அடையாது அல்லவா??
கடமைகளில் இருந்து
தப்பிக்க முயற்சிக்காதே
பலன்களை அனுபவிக்க
நினைக்காமல் செயலாற்று
ஆழ்ந்த கருத்துள்ள
வாழ்க்கை நெறி அன்றோ இது??
இன்று என் செவிகளை
எட்டிய பொன் வார்த்தைகள் இவை
சுயநலம் என்னும் அரக்கனிடம்
மாட்டிகொள்ளாமல்
சரணடைந்திடுவோம்!!
அந்த முழுமுதற் கடவுளிடம்
ஆசைகளை அடக்க
கற்றிடுவோம்!!
வாழ்வை நன்முறையில்
வாழ்ந்திடுவோம்!!