தனிமை
தனிமை
இப்பொழுது எல்லாம் எனக்கு தனிமையே நண்பனாகி இருக்கிறது,
இப்பொழுது எல்லாம் நான் ஏமாற்றத்தை சந்திப்பதில்லை,
இப்பொழுது எல்லாம் நான் துரோகத்தை சந்திப்பதில்லை,
இப்பொழுது எல்லாம் நான் யாருக்காகவும் காத்திருப்பதில்லை,
இப்பொழுது எல்லாம் நான் யாருக்காகவும் அழுவதில்லை,
இப்பொழுது எல்லாம் நான் யாரை நினைத்தும் வேதனை படுவதில்லை,
இப்பொழுது எல்லாம் நான் யாரையும் எதிர் பார்ப்பதில்லை,....
இப்பொழுது எல்லாம் எனக்கு என்ன பிடிக்கிறதோ,
எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்கிறேன்,
யாரை பற்றியும் யோசிப்பதில்லை,
என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன்....