STORYMIRROR

Laxmi Natraj

Abstract

4  

Laxmi Natraj

Abstract

ஒற்றை மல்லிகை

ஒற்றை மல்லிகை

1 min
363


   வாசம் மிகுந்த ஒரு ஒற்றை மல்லிகை

             

   ஒரு சிறிய இலையுடன் இணைந்து


 அமைதியாகத் தூணின் கீழ் காத்து இருந்தது


 கோவிலின் படிகளின் அருகில


 அந்தப் பெண் கோவிலில் நுழைந்தாள


நேர் கோட்டில் அந்தத் தூணை நோக்கிச் சென்றாள்


அந்த ஒற்றை மலரைக் கையிலேயே எடுத்து


கண்ணீர் பொங்கும் கண்களில் ஒற்றிக்கொண்டாள்


கைப்பையில் வைத்துக் கொண்டால் அந்த மலரை


ஆம் அந்த மலர் அவள் நீண்ட கருங்கூந்தலை


அலங்கரிக்க வைக்கப்படவில்லை


அந்த மலர் ஒரு செய்தி இருவருக்கு இடையே


இளமையும் அன்பும் பொங்கும்


இரண்டு இதயங்களை இணயமுடியாமல்


தடுக்கும் இந்தக் கொடூர உலகத்துக்கு.

           








Rate this content
Log in

Similar tamil poem from Abstract