கடவுளின் குரல்
கடவுளின் குரல்
என் பிறப்பு முதல்
பல குரல்கள் கேட்டேன்...
தாயின் குரலில் பாசம்,
தந்தையின் குரலில் நேசம்,
தாரத்தின் குரலில் சுவாசம்,
இறைவனின் குரல் கேட்க,
இதயம் தேடி ஏங்க,
சர்வமும் அடங்கி,
தன்னிலை மறக்க,
இதமாய் ஒலித்தது,
என்
மகளின் குரலாய்.
