கடலின் பாடல்
கடலின் பாடல்
கடல் அலையின் ஓசையில் என்ன ஒரு இசை வியப்புடன் ரசித்த நான்,
இந்த நொடி என் வாழ்நாளில் மிக முக்கியமான நாள்,
இசையின் பல வடிவங்களில் என்னக்கு மனதுக்கு நெருக்கமாக இருப்பது இந்த கடல் அலையின் ஒலி.
கேட்கும் நொடி முதல் இன்று வரையிலும் நீங்காமல் இருக்கும் இசை உணர்வு,
இப்படி ஒரு தருணத்திலும் பல சவால்கள் நிறைந்ததாக மாறிய என் வாழ்க்கை ஒரு புரம்,
என் கனவு லட்சியம் ஒரு புரம் என என் கண்முன் இரு வேறு பாதை.
எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற குழப்பம் மனதில் உதித்தது,
கேள்வி சிறியது என்ற போதும் பதில் மட்டும் கடினமான இருந்தது,
ஒரு வேளை பதில் கிடைத்தால் நிம்மதி கிடைக்குமா என்றால் அதற்கும் விடை இல்லை என்னிடம்.
அலைந்து அலைந்து மனமும் நிற்காமல் ஓடியது கடல் அலை போல,
சற்றே மனதில் உதித்த பாடல் வரிகளை எழுதினேன் நானே வேகமாக,
பாடல் வரிகள் கவர்ந்தது என் குழுவினரை மேட்டு அமைத்து பாடலை பதிவு செய்து வெற்றி பெற்றோம்.