கற்சிலை
கற்சிலை
உயிரற்று கல்லாய்
கிடந்த என்னை
உருவாக்கிய சிற்பியே!
கண்டவர் கண்டுகளிக்க
உனது தாய் அளித்த
பாலூட்டும் பகுதியை
தெய்வமாய் நினைக்க
எண்ணி நீ படைத்தாய்!
வருங்காலமோ பாலியல்
போதையில் நேரான வாழ்க்கை
வாழ மறந்து என் இனத்தை
கொச்சைப்படுத்தும்
ஆணினத்தைத் திருத்த
என்மேல் துணி கொண்டு
மூடியே இனி சிற்பங்கள்
படைப்பாயா!
பெண்கள் படும்
அவஸ்தைகளுக்கு உன்னுடைய
கலைத்திறன் காரணமாகலாமா!
கண்ணிலிருந்து கண்ணீர்க்கடல்
சொட்ட சொட்ட
பெண்ணினம் ஆண் சமுதாயத்தினருடன்
தாயாய் சகோதரியாய்
வாழ மட்டுமே நினைக்கையிலே
இனியாவது ஒருவனுக்கு ஒருத்தி
பண்பு காட்டும் சிற்பங்களை
வடிப்பாயா!