என்னவென்று சொல்வேன்
என்னவென்று சொல்வேன்
என்னவென்று சொல்வேன்,
எதிர்பாராமல்,
உன்னையும் அறியாமல்,
நீ தீண்டிய தீண்டலை.....
என்னவென்று சொல்வேன்,
யாரென தெரியாமல்,
எனக்காக நீ பேசிய வார்த்தைகளை....
என்னவென்று சொல்வேன்,
என்னையும் அறியாமல்,
உன் புன்னகையிலே,
நான் இலயித்திருப்பதை....
என்னவென்று சொல்வேன்,
உந்தன் பாதம் பட்ட இடங்களில் மெய் மறந்து இருப்பதை....
என்னவென்று சொல்வேன்,
உந்தன் பின்னால் நான் நடப்பதை....
என்னவென்று சொல்வேன்,
நான் நீயாக மாறிப் போனதை....
