சமூக அவலங்கள்
சமூக அவலங்கள்
மனிதத்தை மறக்கடிக்கும் மதம் ,
ஓற்றுமையை ஒழிக்கும் ஜாதி ,
இந்தியாவின் ஆரோக்கியத்தை
அழிக்க வந்த மருந்துகள் இல்லாத
வைரஸ் வியாதிகள் !
மதம் பிடித்தவர்கள் ,
மது குடிகிறார்கள்,
பிறகென்ன ,
மனிதம் தூங்கிவிடும்
மிருகம் பேச ஆரம்பிக்கும் ,
இரவு முழுவதும்
இவன் வைத்ததுதான் சட்டம் ,
இந்தியாவின் பொருளாதார ஏற்றமும்
இரக்கமும் இதனால் உண்டு !
கரும்பு தின்ன கூலி போதவில்லையாம் ,
இன்னும் கொக்கரிக்கிறார்கள் புது மாப்பிள்ளைகள் ,
கொடுத்ததெல்லாம் கொடுத்து கொடுத்து
பெற்றவர்கள் கழுத்து இருகும் வரை ,
வலுவாக இருக்கிறது தாலிக்கயிறு !
வரம்புகள் மீறிய பக்தி ,
போளிசாமியார்களின் புதுபுது அவதாரங்கள் ,
நெறி தவறிப்போன பக்தி மார்க்கம் ,
கௌரவ பிச்சைகாரர்களின் இறுதி அவதாரம் !
காப்பி கொட்டை தூளுக்குள் ,
புளியங்கொட்டை தூள் ,
சக்கரைக்குள் ரவை ,
அரிசிக்குள் கல் ,
தண்ணீருக்குள் பாலை தேடும் வினோதம் ,
கலப்பட உணவால் கதிகலங்கும் மக்கள் !
வாழவைக்கும் மருத்துவம் ,
சாகடிக்கும் போலி மருந்துகள் ,
சில பணப் பேய்களின்
அதிரடி வளர்ச்சி வைத்தியம் ,
வயித்துவலிக்கு மாத்திரை சாப்பிட்டவன்
மூளை கலங்கி செத்துப்போகிறான் ,
காலாவதி மருந்துகள்
மனிதனையும் காலவதியாக்குது !
பரந்த உலகில்
பெண்களின் சிறிய உலகம் சின்னத்திரை ,
சீரியல் படங்களால்
சீரழிந்து போகும் கலாச்சாரம் ,
மனிதர்களை மறக்கடிக்கும்
மாயத்திரை !
கல்வி இன்று மனிதனை
மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக
உருவாக்குகிறது
அல்லது ,
பணம் ஈட்டும் கருவியாக படைக்கிறது ,
அனுபவ பாடங்கள் ,
நல்ல கதைகள் ,
புத்தகங்களோடு சரி ,
ஒழுக்கங்கள் கட்டுபாடுகள்
காணமல் போய்விட்டது பள்ளியின் பீஸ் லிஸ்டில் !
தேடலில் தொடங்கி ,
காமத்தில் முடியும் காதல் ,
கண்டவனையெல்லாம் கணவனாக நினைத்து ,
கற்பிழந்து , களையிழந்து ,
கரும்பு சக்கையான பின்பு ,
திரும்பி கடந்தகாலத்தை வேடிக்கை
பார்க்கிறது இளமை ,
எல்லாம் வயசுக்கோளாரின் நாடகம் !
மனிதநேயம் ,
மெத்தை வீடுகள் கட்ட
கூரைகளை எரித்துப்பார்க்கிறது !
சுதந்திர காற்றையா சுவாசிக்கிறோம் ,
இல்லை இல்லை
காற்றிலும் , நீரிலும்
சோற்றில் கூட விஷமல்லவா ,
100 வயதை 50 க குறைத்துவிட்டதே
அதீத விஞ்ஞானம் !
புத்தக பைகள் சுமக்க வேண்டிய கைகள் ,
கூலி வேளையில் கொத்தடிமைகளாய் ,
இந்தியாவின் எதிர்கால தூண்கள் ,
செங்கல் சூலைகளிலேயா கரைந்து போவது !
உப்பிட்டவனை உள்ளளவும் நினை ,
மறந்து போச்சே உலகம் ,
உழைத்து கொடுத்தவனுக்கு ,
உணவு இல்லையாம் ,
விளைவித்தவர்கலையே
அறுவடை செய்கிறது வறுமை !
தலை நிமிர்ந்த கட்டிடங்களால் ,
தலை குனிந்த நிலத்தடி நீர் ,
எட்டாத நூல் எட்டிப்பார்த்தும் கிட்டவில்லை ,
வற்றிப்போன ஆறுகளில்
நீர்தான் இல்லாமல் போகும் ,
இன்று மணலை கூட காணோம் !
விளைவித்த நிலங்கள்
இன்று விலை நிலங்களாய்,
பசுமை பரவிக்கிடந்த கழனியும் ,கொள்ளியும்,
பாலைவனமாக மாரிப்போச்சுதே ,
மனை பட்டாக்களால் !
சோம்பேறி உலகம்
உழைத்து சாப்பிட தயக்கம் ,
வழிப்பறி ,கொள்ளை ,
அதற்காக கொலை ,
சட்டத்தின் ஓட்டைகளில்
நன்றாகவே குளிர்காயும் குற்றவாளிகள் !
தொல்லைகளாக வரும்
தொலை பேசிகள் ,
இவர்களின் பேச்சு சுதந்திரம்
வானம் வரை கிழித்துக்கொண்டிருக்கிறது ,
இரவு உறக்கத்தில் அப்பன் ஆத்த தேவையில்லை ,
செல்போனே போதும் !
நேற்றுவரை கொலைகாரன்
இன்று பொதுநலவாதி ,
நாள் அவரே அரசியல் வாதி ,
கொடிகளாய் பறக்கும் அவர்களின் கோமணங்கள் ,
குற்றத்தில் இருந்து தப்பிக்க அரசியல் களம் ,
இங்கு ஒரு ருபாய் போட்டால்
ஓராயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் !
பாரதியின் பாடல்களை
படிப்பதோடு விட்டுவிடாமல் ,
நடைமுறையில் நடைமுறைப்படுத்து ,
நாடு செழ்க்கும் நாமும் செழிப்போம் !