STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Drama

3  

ANURADHA CHANDRASEKHAR

Drama

அவையடக்கம்

அவையடக்கம்

1 min
223

இனி என் வாழ்வின் பாதி அவள்

அம்மா சொன்னாள் தலையாட்டினேன்

இனி அவள் சொல்வாள் தலையாட்டுவேன்


முதல்நாள் அறிமுகம்

மறுநாள் நகர்வலம்


முகம் தெரியவில்லை 

மனமும் தெரியவில்லை

 மொழி  தெரியவில்லை

பேசும்வழியும் தெரியவில்லை


வார்த்தைகள் மனதுக்குள்

ஆசைகள் விழிகளுக்குள்


நான் சிறைப்பட்டு விட்டேன் என்று

இந்த நாளும் சிறைப்பட்டு விடுமோ


தேடினால் வார்த்தைகள் கிடைப்பதில்லை

தேடாமல் மகிழ்ச்சி கிடைப்பதில்லை


ஆவலில் கழிந்தது பாதிநேரம்

தவிப்பில் கரைந்தது மீதிநேரம்

இரண்டு ஹலோவில்

முடிந்தது கடைசி நேரம்


அன்றும் பேசத் தெரியவில்லை

இன்றும் பேசத் தெரியவில்லை


அன்று தெரியாததால் பேசவில்லை

இன்று தெரிந்ததால் பேசவில்லை

'அவையடக்கம்!'


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama