ஏதோ ஓர் கவிதை
ஏதோ ஓர் கவிதை
ஏதோ ஓர் கவிதை.
யார் பேச்சையும்
கேட்பதே இல்லை.
தன்நிலை மோசமாவதை உணரும்போதெல்லாம்
தனக்கு பிடித்தமான வார்த்தைகளை
தேர்ந்தேடுத்து
தன்னை தானே தேற்றி கொள்கிறது.
அதற்கு விலை இல்லை.
எவ்வளவு விலை கொடுத்தாலும்
அதனை வாங்க இயலாது.
வேண்டுமென்றால்
அதன் விருப்பத்தோடு
உருப்புகளாய் அதனுளிருக்கும்
சில உவமைகளை எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.
அக்கவிதைக்கு அழகு
எழுதியிருக்கும் காகிதத்தில் இல்லை.
கைவிரல் பிடித்திருக்கும் எழுதுகோலிலுமில்லை.
அதன் கரு
உருவான இடம் கூட இல்லை.
அவை வாசிக்க படும்
வாசகரின் உச்சரிப்பிலே அடங்கியுள்ளது.
அகோர முகமுடைய
அவனுக்கும் அவளுக்கும்
ஆறுதல் அக்கவிதையே.
பறிமாறிக் கொள்ள
முத்தங்கள் இருப்பினும்
அதில் அவர்களுக்கு முழுமையே கிட்டவில்லை.
சரியான இடைவெளி விட்டு
மூச்சு வெளிப்படும் போது
அக்கவிதையின் சொற்கள் வெளிப்பட
காமமும் தோற்று போய்விடுகிறது.
சில காலம் கடந்த பின்னர்,
குழந்தை போல
ஓர் கவிதை
அவர்களுக்குள் பிறந்தாயிற்று.
அக்குழந்தையின் மீது பொறாமை கொண்ட
முன்னிருந்த ஏதோ ஓர் கவிதை
கரி பொருளாக உருமாறி
வைரமாக மீண்டும் பிறக்கிறேன் என கூறி
மண்ணுள் தன்னை புதைத்து கொண்டது.