தரிசனம்
தரிசனம்
அச்சிறுபாக்கத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் பாபுராயன்பேட்டை என்கின்ற கிராமத்தில் மிக பிரம்மாண்டமான பெருமாள் கோவிலும் அதற்கு இணையான சிவன் கோவிலும் உள்ளன.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகையை அதிகப்படுத்தும் நோக்கில் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இரு முறையோ ராம நாம ஜபம் விஷ்ணு சகஸ்ர நாமம் தேவார திருவாசக பதிகங்கள் பாடுதல் குழுக்களின் தன் ஆர்வலர் தொண்டு தேவைப்படுகிறது.
பக்தர்கள் வருகை நின்று விட்டதால் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாபு ராயன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான கோவில்கள் சீரழிந்து வருகிறது. இதை சீர் கெடாது தடுத்து மீண்டும் புனரமைக்க வேண்டும் என்றால் அதற்கு தேவை பக்தர்களின் வருகை; பணம் அல்ல :
நீங்கள் ஒரு முறை வந்து இங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்து விட்டால் மீண்டும் மீண்டும் வந்து தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவரே தூண்டி விடுவார். நீங்களும் பலருக்கு இந்த கோவிலின் பெருமையை பற்றி சொல்ல ஆரம்பிப்பீர்கள்.