மாற்றம்
மாற்றம்
வானத்தில் தவழும் மேகமானது
தாமரைஇலை தண்ணீர் போலானது;
காந்தமாய் ஈர்த்த கண்கள்
கண்டிப்பை காட்டுகிறது;
மௌனத்தை மொழிபெயர்த்த மனம்
வார்த்தைகளின்றி தவிக்கிறது;
இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தது
பிரிந்து செல்ல முற்படுகிறது;
காதலை வேண்டிய நெஞ்சம்
தனிமையை நாடுகிறது;
விரல் தீண்டிய தேகத்தை
நினைவலைகள் தீண்டுகிறது...
நாம் என்னும் உலகம் சிதைந்து
நான் நீ என்று
மாறி போனது!