மன்வந்த்ரம் part 3
மன்வந்த்ரம் part 3
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
சாபத்தை மாற்றினால் பார்வதிக்குக் கோபம் வரும். வரம் தராவிட்டால் வஸிஷ்டர் வருந்துவார். பார்வதியும் வஸிஷ்டரும் வருத்தப் படாமல் ஒரு வரத்தைத் தர வேண்டும் என மஹாதேவன் நினைத்தார். அதனால் ஒரு மாதம் பெண்ணாகவும் ஒருமாதம் ஆணாகவும் இருக்க வரம் அருளினார்.
ஆணுருவத்தோடு நகரம் சென்ற ஸுத்யும்னன் வியாஸரிடமிருந்து தான் பெண்ணாக மாறின காரணம் அறிந்து கொள்கிறான். பெண்ணாக மாறின போது அந்தப்புர வாசமும், ஆணாக மாறியதும் அரசாட்சி நிமித்தம் கொலு மண்டபத்திலும் இருந்து காலம் தள்ளி வந்தான். விபரம் அறிந்த மக்கள் அவன் ஆட்சியை விரும்பாமல் அலக்ஷியம் செய்து வந்தனர்.
இதை அறிந்து கொண்ட ஸுத்யும்னன் தன் மகனான புரூரவனுக்கு யௌவனம் வந்ததும் ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்தான். ஆரண்யம் சென்று நாரத மஹரிஷியிடம் நவாக்ஷர மந்த்ர உபதேசம் பெற்றுப் பல வருடங்கள் ஜபம் செய்து வந்தான்.