anuradha nazeer

Inspirational

4  

anuradha nazeer

Inspirational

மன்வந்த்ரம் part 2

மன்வந்த்ரம் part 2

1 min
19


ஒருநாள் இவன் ஆண்குதிரையில் தன் சகாக்களுடன் வேட்டைக்குச் சென்றான். அங்கு இளாவ்ருதம் என்னும் ஒரு உத்யாவனத்தைக் கண்டு அங்கு மரங்கள் பூத்திருப்பதையும் குயில்கள் பாடுவதையும் கண்டு மகிழ்ந்து அதனுள் தன் குதிரை, சகாக்களுடன் உள்ளே நுழைந்தான். உடனே ஸுத்யும்னன் உள்பட அனைவரும், (குதிரை உள்பட) பெண்களாக மாறிவிட்டனர். 


ஸுத்யுனன் இளா என்ற பெயருடன் வசித்து வந்தான். நாணத்தால் அரண்மனைக்குப் போகவில்லை. ஒரு நாள் சந்திரனின் புதல்வன் புதன், இளாவைப் பார்த்து இருவரும் மோகித்து இளா கர்பவதி ஆகி, புரூரவன் என்னும் குழைந்தையைப் பெற்றெடுத்தாள். தன் நிலை எண்ணி வருந்தி மீண்டும் ஆணாக நினைத்தாள். தன் குல குருவான வஸிஷ்டரை நினைத்தாள். அவரும் ஞான திருஷ்டியால் இதை அறிந்து மகாதேவரை நோக்கித் தவம் செய்தார்.


இளாவ்ருதம் என்னும் அந்த உத்யாவனத்திற்கு ஒருநாள் ஸனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்களின் காந்தி எங்கும் பரவியது. அன்னையும் ஈசனும் உல்லாசமாக இருந்த நேரம் ஆதலால், அவர்கள் மீண்டும் தபோவனம் நோக்கித் திரும்பிச் சென்றனர். அன்னை, ஸனகாதிகளின் ஒளி கண்டு ஈசனிடமிருந்து விலகி நாணம் கொண்டாள். காரணம் அறிந்த பின் இருவரும் அந்த உத்யாவனத்தில் ப்ரவேசிப்பவர்கள் பெண்ணாக ஆகட்டும் என சபித்தனர். வஸிஷ்டரின் தவத்தால் மகாதேவன் அவர் முன்னால் தோன்றினார். வஸிஷ்டரும் பெண்ணுருவம் கொண்ட ஸுத்யும்னன் ஆணாக வேண்டினார். ஆனால் மகாதேவனோ சாபத்தை மாற்ற முடியாது என்ன செய்வது என யோசித்தார்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational