STORYMIRROR

anuradha nazeer

Inspirational

3  

anuradha nazeer

Inspirational

மேனேஜ்மென்ட்

மேனேஜ்மென்ட்

1 min
249

ராமன் மிகவும் கஷ்டப்பட்டான் .தன் தாய் மற்றும் மனைவி இருவரையும் ஒருசேர அனுசரித்துப் போக முயற்சி செய்தான். எனினும் அவன் பொறுமைக்கு பரிசு கிடைக்கவில்லை. தினமும் வாழ்க்கையில் போராட்டத்தை சந்தித்தார். ஒருநாள் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மேனேஜர் ஒரு வார்த்தை கூறினார். அதாவது மேனேஜ்மென்ட், அந்தத் திறமை மட்டும் உனக்கு இருந்தால் நீ எத்தனை பேரையும் உலகத்தில் சமாளிக்கலாம் என்றார்.


அந்த வார்த்தையை நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டே இருந் தான்  ராமன். அப்போதுதான் அவனுக்கு சட்டென்று ஒன்று விளங்கியது.  அது முதற்கொண்டே அவன் தன் மனைவியிடம் தாயாரைப் பற்றி ஒரே குறை கூற ஆரம்பித்தான்.. அதேபோல் தாயாரிடம் மனைவியை பற்றி குறை கூறிக் கொண்டே இருந்தான். ஓகே, இருவருக்குமே ராமன் மீது கோபம் வந்தது.. எப்படி என் மாமியாரை பற்றி குறைகூறிக் கொண்டே இருக்கிறாய்.


அவர்கள் மிகவும் நல்லவர்கள் ஆயிற்று என்றால் மனைவி அதேபோல் தனது தாயாரும் என்ன நீ சதா உன் மனைவியைப் பற்றிக் குறைகூறிக் கொண்டே இருக்கிறாய்.. என் மருமகள் எவ்வளவு சிறந்தவள் தெரியுமா  உலகத்தில் மற்ற மருமகள் இருக்கிறார்களே எவ்வளவு மோசமானவர்கள் .அப்படியிருக்க என் தங்கமான மருமகளைப் பற்றி நீ குறை கூறிக் கொண்டேஇருக்கிறாய்.  என்று தாயார் கூறினார்..அப்போதுதான் ராமனுக்கு புரிந்தது ஆகா மேனேஜர் சொன்னார் மேனேஜ்மென்ட் என்பது இதுதான் என்று


Rate this content
Log in

Similar tamil story from Inspirational