anuradha nazeer

Inspirational

5.0  

anuradha nazeer

Inspirational

ஜமாத்

ஜமாத்

1 min
292


ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர் பிந்து. இவரின் கணவர் அசோகன் இறந்துவிட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார்.


தனது கணவர் அசோகன் இறந்தபின் மிகவும் வறுமையிலும், சிரமத்திலும் பிந்து வாழ்க்கையை நடந்தி வந்த பிந்து தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தார். செருவாலி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவருக்கு தனது மகளை மணம் முடிக்க ஏற்பாடு செய்தார்.


ஆனால், திருமணச் செலவுக்கு போதுமான பணம் பிந்துவிடம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்திடம் சென்று தனது நிலைமையைக் கூறி உதவக் கோரினார். பிந்துவின் குடும்பச் சூழலை உணர்ந்த ஜமாத்தின் செயலாளர் நிஜுமுதீன் அலுமூட்டில் ஜமாத்தில் பிந்துவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.


மதம் கடந்த உதவி கோரி வந்திருக்கும் பிந்துவின் குடும்பத்தினருக்கு உதவ முஸ்லிம் ஜமாத் மக்கள் முன்வந்தனர். திருமண மண்டபம் ஏதும் தேடாமல் மசூதியில் இந்து முறைப்படி, புரோகிதர் வைத்து திருமணம் நடத்த ஜமாத் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதை பிந்துவிடம் ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மேலும், திருமணத்துக்கு 2500 பேருக்கு தேவையான அசை உணவு வகைகளையும் ஜமாத் சார்பி்ல் தயாரிக்கப்பட்டது. மணப்பெண் அஞ்சுவுக்கு ஜமாத் சார்பில் 10 சவரண் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும் வழங்க முடிவு செய்யப்பட்டது.


முஸ்லிம் மக்கள் முயற்சியில் இன்று காலை செருவாலி மசூதியில் சரத், அஞ்சுவின் திருமணம் இந்து முறைப்படி அர்ச்சகர் மந்திரங்கள் ஓத திருமணம் நடந்தது. திருமணத்துக்கு ஏராளமான முஸ்லிம்களும், இந்துக்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி, உணவு சாப்பிட்டுச் சென்றனர்.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational