வெற்றி திருமகன்
வெற்றி திருமகன்
வறுமையின் பிடியில்
அவன் குடும்பம்
சிக்காதிருக்க
வேர்வைக்கு இரையாகி
போனான் அந்த வீரமகன்
அவனின் உழைப்பினால்
கிடைத்தது உணவு மட்டுமல்ல
அவன் குடும்பத்தின் உயிர்
பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல்
தடைகளை தகர்த்தெரிந்து
தரணி போற்ற
இறுதிவரை உழைக்கிறானே
அவனிற்கு எத்தனை
விருதுகள் தந்தாலும்
மிகையாது
விண்மீனும் கூட ஒரு நாள்
பொறாமை படும்
அவன் எட்டப்போகும்
உயரத்தை கண்டு!!