உதயகீதம்
உதயகீதம்
கண்சிமிட்டும் ரகசியமே
புன்னகை செய்ய மாட்டாயா
இடைவிடாத தேடலே
உயிரூட்ட மாட்டாயா
கதை பேசும் நிலவே
மனதை உரைக்க மாட்டாயா
சுவாசமான வாசமே
ஏக்கங்கள் தீர்க்க மாட்டாயா
வழி தவறி
திரிகிறேன் வானிலே
பௌர்ணமியாய் தரிசனம்
தர மாட்டாயா
தனித்து நிற்கும் இரவிலே
ஐவிரல் பற்றி
விலகாமல் இருப்பாயா
ஓசையற்ற இசையாய்
உடைந்த இசையாய்
இல்லாமல் என் மனதின்
உதயகீதமாய் உடன் வருவாயா
காலமெல்லாம்...