உன்னுள்....
உன்னுள்....
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
உன் கரம் பற்றிய பொழுதினில்
எனக்குள் ஒரு தடுமாற்றம்
தவிப்புடன் வந்தது
சட்டென ஒரு மாற்றம்.
நம் கைகளுக்குள்
காதலுடன் துடிக்கும்
நம் இதயங்களின் ஓசையினை
உன் துடிக்கும் இதழ்களில்
என் கண்கள் உணர்ந்திட
நெகிழ்வுடன் உன் கரம் விலகியது
ஏனோ என் இனியவளே?