தந்தையின் உள்ளம்
தந்தையின் உள்ளம்
வசந்த காலத்தை காட்ட
என் வீட்டில் அவதரித்தாள்
ஈடுயிணையில்லா வரமாக
அவளோடு சேர்ந்து தினம்
நானும் வளர்ந்தேன்
என் கைபிடித்து நடந்தவளை
கரம் பிடித்து கொடுக்கிறேன்
அவள் மனம் கவர்ந்தவனிடம்
இணையோடு இணைந்துவிட்ட
மகிழ்ச்சி அவள் வதனத்தில்
கண்முன்னே வளர்ந்தவள்
கணவனோடு நிற்கையில்
ஆனந்தக்கண்ணீர் என்னிடத்தில்
ஆயிரம் பேர் சூழ்ந்திருந்தும்
மகளின் சலங்கை ஒலியை
மட்டும் விரும்பி கேட்கும்
தந்தை நான்!