திருக்குறள்
திருக்குறள்
குறள் 846:அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழிமு.வ உரை:தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.சாலமன் பாப்பையா உரை:தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.கலைஞர் உரை:நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்