தாய்மை
தாய்மை
தனிமையில் நான் தவித்த நொடிகளில்
உனக்குள் உனக்காக நான் இருக்கிறேன்
என்று என்னுள் ஜெனித்தவள் நீ
உன் பிஞ்சு கால்கள் கொண்டு என்னை உதைக்கையில்
மனம் ஆனந்த கூத்தாடியது
நானும் அழகி தான் என்று மனம் ஒப்புக்கொண்டது
நிறைமாத கர்ப்பிணியாக கண்ணாடியில் என் பிம்பத்தை பார்த்த பொழுது
உன் வருகையைக் கொண்டு என் வாழ்வை முழுமையாக்கிவிட்டாய்
சிறு முகப்பருக்கும் கவலைக் கொண்ட நான்
இன்று உன் வரவால் நான் பெற்ற பிரசவ தழும்புகளை வரமாக எண்ணுகிறேன்
என் அரவணைப்பில் நீ இருக்கும் நேரம் அத்தனை கர்வமாக உணர்கிறேன்
உன் பொக்கை வாய் சிரிப்பால்
என் கவலைகளை மறக்கடித்தாய்
நானும் பாடகி தான் என்று நினைத்து கொண்டேன்
என் தாலாட்டில் நீ துயில் கொண்ட பொழுது
தாய்மை எண்ணும் உணர்வை என்னுள் விதைத்த தேவதை நீ