STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Children

3  

Harini Ganga Ashok

Drama Children

தாய்மை

தாய்மை

1 min
167

தனிமையில் நான் தவித்த நொடிகளில்

உனக்குள் உனக்காக நான் இருக்கிறேன்

என்று என்னுள் ஜெனித்தவள் நீ

உன் பிஞ்சு கால்கள் கொண்டு என்னை உதைக்கையில்

மனம் ஆனந்த கூத்தாடியது

நானும் அழகி தான் என்று மனம் ஒப்புக்கொண்டது

நிறைமாத கர்ப்பிணியாக கண்ணாடியில் என் பிம்பத்தை பார்த்த பொழுது

உன் வருகையைக் கொண்டு என் வாழ்வை முழுமையாக்கிவிட்டாய்

சிறு முகப்பருக்கும் கவலைக் கொண்ட நான்

இன்று உன் வரவால் நான் பெற்ற பிரசவ தழும்புகளை வரமாக எண்ணுகிறேன்

என் அரவணைப்பில் நீ இருக்கும் நேரம் அத்தனை கர்வமாக உணர்கிறேன்

உன் பொக்கை வாய் சிரிப்பால்

என் கவலைகளை மறக்கடித்தாய்

நானும் பாடகி தான் என்று நினைத்து கொண்டேன்

என் தாலாட்டில் நீ துயில் கொண்ட பொழுது

தாய்மை எண்ணும் உணர்வை என்னுள் விதைத்த தேவதை நீ


Rate this content
Log in

Similar tamil poem from Drama