ஓயாத நிழல்: வேலைவாய்ப்பின்மை கவலைகள்
ஓயாத நிழல்: வேலைவாய்ப்பின்மை கவலைகள்
விடியலின் ஓரம் ஒரு கவலைக் கோலம்,
இரவினில் தொடரும் அதே மனப் பாரம்...
போகின்ற பாதையில் ஊரெல்லாம் ஓட,
தடம் மாறி நான மட்டும் தனியாக நிற்க...
"எங்கே உன் பயணம்?" என்றே உலகம் கேட்க,
மௌனத்தின் வார்த்தைகள் சுமையாகிப் போக...
காசில்லா மனிதன் பூஜ்ஜியம் தானா?
வேலைகள் இல்லையென்றால் வாழ்வே கேள்விதானா?
இல்லை... இது வெறும் இடைவேளைதானே!
கதை இன்னும் முடியவில்லையே!
