நிலவு
நிலவு
முட்டையே
உன் வெளி ஓட்டால்
உலகிற்கு வெளிச்சம் தருகிறாய்
உன் கருவில் உள்ள
குழந்தையை நீ எப்போ
எங்களுக்கு காட்டப் போகிறாய்
உன்னை பார்த்து குழந்தைகள்
உணவு உண்கிறார்கள்,
உன் அழகு வடிவத்தை
வருனிக்க வார்த்தைகள் இல்லை!
உன் அமைப்பை அசைக்க
ஆளும் இல்லை!
தாயாய் கருவைக் காக்கிறாய்
சேயாய் எங்களை
மகிழ்விக்கிறாய்
நீ நிலவா?
எங்களின் வாழ்வா?
