நீயே
நீயே
என் மணல் எங்கிலும்
உன் தடம் தான்
என் மனம் முழுதிலும்
உன் முகம் தான்
நான் கேட்கும் பாடல்களில்
உன் நினைவு தான்
உயிரற்ற தேகம் என்னை
உன் மேல் போர்த்திக்கொண்ட
நீள் வானம் நீயே
கலைந்த என் உலகினுள்
கனவாய் நுழைந்ததும் நீயே
காற்று போல் எங்கும்
என்னில் நிறைந்திருப்பதும் நீயே
இமை மூட மறுத்து நான்
பார்க்க நினைப்பதும் உனையே
அதரங்கள் விரும்பி உச்சரிக்கும்
இனிமையான பெயரும் உனதே
நித்தம் என் செவிகளை
எட்டும் குரலும் உனதே
என் தோட்டத்தில் பூக்கும்
ஒவ்வொரு மலரிலும்
நின் உருவமே
எதிலும் நீயே
என்றும் நீ மட்டுமே...