மழை
மழை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
தூரிகை எடுத்து வானம் வரைந்து மேகம் பிரித்து
வண்ணம் தீட்டுகையில்...
தென்றலின் விரல்பட்டு
கொட்டித் தீர்க்கிறது....
பெருமழை...!
உயிர் காக்கும் மழைத்துளிக்கு
உருகொடுப்பது...
இறைவனா...?
இயற்கையா...?
இன்று வரை தொடர்கின்ற விவாதத்தை....
அமைதியாய் ரசித்தப்படி
தலையாட்டுகிறது....
வெட்டுப்படாமல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்......
பிழைத்திருக்கும்
சிறு மரங்கள்.....!
இயற்கை தன் அழகை நொடி தோறும் அரங்கேற்றும் மழையாக...
பூமியெனும் மேடையிலே....