எனது பயம்
எனது பயம்
இருவரும் ஒன்றாக கரை ஓரம் நடந்தோம் ,
இயற்கை அழகை ரசித்திருந்தேன்;
நீ எனது அழகை ரசித்த வேளையில்
உனது விழிகள் என் பக்கம் பார்கிறது.
தலை குனிந்தேன் உன்னை எதிர் கொள்ள பயந்து
நீ காதலுடன் என்னை பார்க்க ,
என்னை இழந்து விடுவேனோ என்ற பயம் .
பல வருடம் எனக்காக காத்திருக்கிறாய்
நானும் வேண்டாம் என்று மறுக்க நினைத்தேன்
நீ வேண்டும் என்று இதயம் சொல்கிறது,
அறிவோ எனது இலட்சியத்தை நோக்கி செல்கிறது ;
உனது காதல் என்னை வெல்லுமோ ,
இல்லை எனது சுயநலம் உன்னை கொல்லுமோ !!!