STORYMIRROR

arvind narayanan

Fantasy

4  

arvind narayanan

Fantasy

இரண்டாம் உலகம் - திறப்பு விழா

இரண்டாம் உலகம் - திறப்பு விழா

3 mins
8

இரண்டாம் உலகம் - திறப்பு விழா


 இந்திரலோகத்தில் அன்றைய நாள் விழா கோலம் போல இருந்தது. மும்மூர்த்தி கடவுளான பிரம்மன், பெருமாள், சிவன் சிறப்பு விருந்தினர்களாக வந்தனர், கூடவே இந்திரனும், எமதர்மனும். 

 எமதர்மன் முன்னுரையை பேச ஆரம்பித்தார். "இப்போயிருக்கும் கால கட்டத்தில் தற்கொலைகள் மிக அதிகமாகி கொண்டே போகின்றன. சின்ன பசங்கள்லாம் தற்கொலை பண்ணிக்கறாங்க ரொம்ப சின்ன விஷயத்துக்கு. நான் செய்ய வேண்டிய வேலையை அவர்களே செய்து கொண்டு என் உயிரை வாங்குகின்றனர். அவர்களுக்கு சொர்கத்திலோ நரகத்திலோ இடம் கொடுக்க முடியாத சூழ்நிலை, எல்லோரும் பூமிக்கும் வானுக்கும் நடுவில் சுற்றி இடைஞ்சல்கள் செய்து தொல்லை கொடுக்கின்றனர். இயற்கையாக இறந்தவர்களை இவர்களை தாண்டி வரவைப்பதற்குள் போதும் போடும் என்றாகிறது.

 இதனால் தற்கொலை செய்து இறந்தவர்களுக்கென்று ஒரு உலகம் படைத்து அவர்களை அங்கே அனுப்பி விடலாம் என்று முமூர்த்திகள் முடிவு செய்து, இரண்டாம் உலகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த உலகத்தில் மொத்தம் நான்ககே ஊர் தான். இப்போது முமூர்த்திகள் இரண்டாம் உலகத்தை திறந்து வைப்பார்கள். 

 அவர்கள் மூவரும் கையை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணுவதுபோல் உயர்த்த, மூன்று வெளிச்சம் பிறக்கின்றது இரண்டாம் உலகம் வண்ண விளக்குகள், பலூன்கள் சூழ திறக்கப்பட்டது. மும்மூர்த்திகள் மூவரும் வந்த வேலை முடிந்தது என்று கிளம்ப. 

சிறப்பு விருந்தினராக இந்திரனை கூட்டிக்கொண்டு இரண்டாம் உலகத்தை சுற்றி காட்ட கிளம்பினார் எமதர்மன். 

 ஒரு திறந்தவெளி ரயில்பெட்டி வந்தது ரோலர் கோஸ்டர் போல் ஏறி இறங்கி ஏறி இறங்கி எங்கோ சென்றது. போகிற வழியில் எல்லா ஊரிலும் என்ன விசேஷம் என்று இந்திரன் கேட்க எமதர்மன் தொடர்ந்தார். 

 "நிறைய தற்கொலைகள் இருக்கு இந்திரா அதில் அதிகப்படியான இருக்கும் தற்கொலைகளை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளோம் இந்திரா! ஒன்று குழந்தை இல்லாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்வது, இரண்டு காதல் தோல்வியால் தற்கொலை செய்வது, மூன்று பண பிரச்சனையால் தற்கொலை செய்வது.கொலையானவர்கள் எல்லாம் இங்கே வர முடியாது அவர்களை சொர்கத்திலோ நகரத்திலோ மாற்றி விடுவோம்". பேசி முடிக்கையில் முதல் ஊர் வந்தது....

 "வாங்க இந்திரா இது தான் முதல் ஊர் "பேபி புறம்"". 

"பெயரே வித்யாசமாக இருக்கிறதே இங்கு என்ன விசேஷம், அங்கே என்ன மக்கள் கூட்டம் கம்பிக்கு வெளியே, மேலே என்ன தொலைக்காட்சி"

 "அதுவா இந்திரா, இங்கே நாம் ஊரை பார்க்கும்போது அந்த ஊரின் அழகை தொலைக்காட்சியில் அவர்களுக்கும் தெரியும், இதே மாதிரி தான் எல்லா ஊர் வெளியேவும் இருக்கும் இந்திரா".

 "ஓ! அப்படியா! நல்லது, உள்ளே பார்க்கலாம்!" உள்ளே நுழைந்ததும்....

"இது என்ன குழந்தை பூங்கா போலவே இருக்கிறது எங்கும் எங்கும் குழந்தை மயமாகவே இருக்கிறதே" இந்திரன் ஆச்சிர்யமானார். 


 "இங்கு எங்கும் குழந்தைகளாவே இருக்கும் எல்லாமே பேசும் குழந்தைகள், குட்டி கிருஷ்ணா, குட்டி முருகா, குட்டி ஜீசஸ், குட்டி நபிகள், குட்டி சின் சான், குட்டி டோரா இப்படி உள்ளே வரும்போது இவர்கள் உங்களோடு ஓடி பிடித்து விளையாட வருவார்கள், உப்பு மூட்டை தூக்க சொல்வார்கள், யானை போல் மேலே உட்காரவைத்து போக சொல்வார்கள் திகட்ட திகட்ட குழந்தையின் இன்பம் இங்கே கிடைக்கும், குழந்தை இல்லாமல் தற்கொலை செய்தவர்களை இங்கே அனுப்புவோம் அவர்களும் மனமகிழ்ச்சி அடைவர்". 

 "அருமை, அற்புதம் மிக நல்ல முயற்சி தர்மா" இந்திரன் பாராட்டினார்.

"வாருங்கள் இரண்டாம் ஊருக்கு செல்வோம்" மீண்டும் திறந்தவெளி ரயில் வர அதில் பயணமாகிறார்கள்..... 

 சிறிது நேரத்தில் இரண்டாம் ஊர் வந்தது. 

 "வாருங்கள் இந்திரா இந்த ஊர் தான் "லவ் பேட்டை"". 

 "லவ் பேட்டை, அடடா இங்கு என்ன விசேஷம். அட வானத்திலிருந்து இதய வடிவில் பொம்மைகள் கொட்டிக்கொண்டே இருக்கின்றனவே". 

 "இங்கே காதல் தோல்வியில் இறந்தவர்களை அனுப்புவோம் இங்கிருக்கும் மக்களோடு அவர்கள் காதல் கொள்ளலாம் ஜாலியாக இருக்கலாம், காதலில் மட்டுமே இந்திரா நீங்கள் உங்கள் அந்தபுரத்தை நினைக்காதீர்கள். இங்கே காதல் செய்யவே பெண்களும் ஆண்களும் படைக்கப்பட்டிருக்கின்றனர். வரிசை கட்டி வந்து காதலை தூண்டி விடுவர்"

 "அதோ பாருங்கள் அந்த அருவி கூட இதய வடிவில் கொட்டும், பாறைகளும் இதய வடிவிலேயே இருக்கும். இறந்தவர்களில் நிறைய 90's kid ஆண்கள் இருக்கிறார்கள், இங்கு வந்தாவது பெண்களோடு பேசட்டும் என்று தான் இந்த ஏற்பாடு இங்கேயும் பேசலைனா அவங்க வாழ்க்கை கஷ்டம் தான்". 

 "நன்று நன்று இது நிச்சயமாக மக்களுக்கு உதவும்" இந்திரன் மீண்டும் பாராட்டினார். 

 அடுத்த ஊரை நோக்கி புறப்பட்டனர்..... 

 "வாருங்கள் இந்திரா அடுத்த ஊர் வந்து விட்டது, இந்த ஊர் பெயர் "மணி சேரி"" 

 "இது என்ன?? இங்கு மரத்தில் பணம் விளைந்து தொங்குகிறது..." 

இந்திரன் ஆச்சிர்யத்தில் இருந்தார்.

 "அது தான் இங்கே விசேஷம், இங்கே தான் அதிக கூட்டமும் கூட, பண பிரச்னையால் தற்கொலை செய்தவர்களை இங்கே அனுப்புவோம் அவர்கள் பண மரத்தை வளர்க்க வேண்டும், விவசாயம் பார்க்க வேண்டும் பயிர்கள், செடிகள், மரங்கள் வளர்ந்து பணத்தை முளைக்கும் எல்லா வகையான ருபாய் நோட்டுகளும், பயிர்களில் பத்து ருபாய் நோட்டும், செடிகளில் ஐம்பது ருபாய் நோட்டும், மரங்களில் நூறு, ஐநூறு நோட்டுகள். எவ்வளவு பணம் அறுவடை செய்து கொடுக்கிறார்களோ அவர்கள் கடன் பிரச்சனைக்கேற்ப அந்த பணத்தை பூலோகத்தில் அவர்கள் குடும்பத்திற்கு எப்படியாவது மறைமுகமாக அனுப்பிவிடுவோம்".

 "அடடே இந்த சேவை மிக அருமையாக இருக்கிறதே, அப்போ இந்த ஊருக்கு தான் அதிக கூட்டம் வரும்". 

 "ஆமாம் இந்திரா, வாருங்கள் அடுத்த ஊர் செல்வோம்". 

 திறந்தவெளி ரயில் பெட்டி வருகிறது நீண்ட நேர பிரயாணமாக போகிறது....எங்கும் ஒரே இருட்டாக இருந்தது, ஒரு வழியாக ஊர் வந்தது. "வாருங்கள் இந்திரா இந்த ஊர் பெயர் "மரண குப்பம்"". 

 இதுவரை பார்த்த மூன்று ஊரும் இப்போது வீடியோவில் தற்கொலை செய்த மக்களுக்கும் காண்பிக்கப்பட்டது. இனி இந்த ஊர் மட்டும் காண்பிக்க படாது. 

 "மரண குப்பம் பெயரே பயங்கரமாக இருக்கிறதே.ஏன் இது மட்டும் அவர்களுக்கு தெரியாது". 

 "காரணம் இருக்கிறது இந்திரா நாங்கள் செய்ய வேண்டிய வேலையை அவர்களே செய்து கொள்கிறார்களே இது தவறில்லையா? அதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் இல்லையா, அதே போல் தற்கொலை செய்து பூலோகத்தில் எத்தனை எத்தனை மக்களை தவிக்க விட்டு வந்திருப்பார்கள் அதற்கு இங்கே தண்டனை கொடுக்கப்படும்".

 "எப்போது குழந்தைகளோடு விளையாடி அப்பாடா சந்தோஷம் என்று மனநிறைவாகிறார்களோ அப்போது இந்த ஊருக்கு மாற்றப்படுவார்கள், அதே போல எப்போது காதலில் மூழ்கி காதல் சிறந்தது என்று சந்தோஷமடைகிறார்களோ இங்கே வரவைக்க படுவர், எவ்வளவு அதிகமாக காசு சேமித்து கடன் தீர்ந்தது என்று எண்ணுகிறார்களோ இங்கே மாற்றப்படுவர், இங்கே அவரவர்க்கேற்ப தண்டனை அனுபவித்து மீண்டும் பிறக்க செல்வார்கள், தண்டனையென்றால் சும்மா இல்லை இந்திரா கும்பி பாகமே நடக்கும் இந்திரா" என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் எமன். 

 "சிறப்பு இப்படி செய்தால் தான் மீண்டு பூலோகம் சென்று தற்கொலை செய்யும் எண்ணமே இல்லாமல் வாழ ஆரம்பிப்பர்". 

 "அவ்வளவு தான் இந்திரா நான்கு ஊரும் முடிந்து விட்டது". இப்போது வெளியே சென்றால் அங்கே பெரிய கதவு இருக்கும் ரிப்பன் கட்டி இருக்கும் அதை திறப்பு விழா செய்வது உங்கள் வேலை. கூட்டம் அதிகமாக இருக்கிறது இந்திரா, திறந்தவுடன் நகர்ந்து விடவும் திரையரங்குக்குள் செல்வது போல கூட்டம் அலை மோதும். 

 இந்திரன் திறப்பு விழா செய்ய கூட்டம் அவரவர் ஊருக்கு செல்லப்பட்டது.

 இரண்டாம் உலகம் சிறப்பாக திறக்கப்பட்டது.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy