தந்தையின் தாய்மை
தந்தையின் தாய்மை
கருவுற்ற நாள் முதல்
மனைவிக்கு தாயானான்
சுமந்தவள் அவள் என்றாலும்
தாங்கி கொண்டவன் அவனே
முகம் காணும் முன்பே
கனவுகள் காணுவான்
மறுஉயிர் பெற்றது
அவள் மட்டுமல்ல
தந்தையாக அவனும்
புதிதாக பிறக்கிறான்
நெஞ்சம் கல்லாய் இருந்தாலும்
பிஞ்சு முகம் கரைத்துவிடும்
தாரத்துடன் தன் செல்வத்தையும்
தங்கத்தட்டில் தாங்குவான்
உதிரத்தில் பிறந்தவளுக்காக உயிர்வருத்தி வேலை செய்வான்
தந்தையின் உள்ளமும் உணர்ச்சியும் தாய்மை நிறைந்ததே
வெளிப்படும் தருணம் சில நேரம் என்றாலும்
பெருமிதம் அளிக்கும்.