திருக்குறள்
திருக்குறள்
குறள் 40:செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழிமு.வ உரை:ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.சாலமன் பாப்பையா உரை:ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.கலைஞர் உரை:பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்
