மறக்கவியலா நொடிகள்
மறக்கவியலா நொடிகள்
முடிவறியா இப்பயணத்தில்
இருக்கும் நொடிகளை
இன்பமாக களிக்கவே
எண்ணம் கொண்டிருந்தேன்
விடிந்த அந்த காலை
அமைதிக்கு பதில்
பயத்தை அளித்தது
வரையறுக்க இயலா
சோகம் வந்து
குடியேறியது
அன்று ஜனித்த மலர் கூட
இறுதி மூச்சை சுவாசித்தது
முகம் அறியா உறவுகளுக்கும்
மனம் வேண்டி கொண்டது
மனிதன் மடிந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில்
மனிதநேயமும் பிறந்தது
பல உள்ளங்களில்
மனிதன் மறந்தவற்றை
இயற்கை எடுத்துரைத்தது
இழப்புகள் நேர்ந்தாலும்
இளைப்பாற இடமும் கிடைத்தது
நினைப்பது போல்
வாழ்க்கை அத்தனை
எளிதல்ல என்பதை
புரிய வைத்து சென்றது
நாம் கடந்து வந்த நாட்கள்
எல்லை எதுவரை
என்பதை புத்திக்கு
உரைத்துப்போனது
குறைகளிலும் நிறைகளை
காண பழக்கப்படுத்தியது
பழைய நினைவுகளை
மீட்டி சென்றது
பலரது வாழ்வில்
ஒவ்வொரு உயிருக்குள்ளும்
மாற்றத்தை கொண்டு வந்தது
ஒரே வருடத்தில்
அனுபவத்தில் இருந்து
கற்றுக்கொள்வது
என்றும் மறவாத
ஒன்றல்லவோ
மனம் இருக்கும் இடத்தில்
மனிதநேயமும் இருத்தல்
வேண்டும்
மன உறுதி இருந்தால்
அனைத்தையும் கடந்து
வரலாம் என்னும்
எண்ணத்தையும்
விதைவித்து சென்றுள்ளது
அன்பின் தூறல்கள்
இனியும் நீள வேண்டும்
நம்பிக்கை புதிதாக
உதிக்கவும் செய்தது
முறிந்து போன உறவுகளிற்கு
சிறிது மகிழ்ச்சியும்
கிடைக்க செய்தது
ஒவ்வொரு இரவிற்கு பின்னும்
ஒளிக்கதிர்கள் பிரகாசிக்க
செய்தது!!