மனசு
மனசு
உன் பார்வை
நான் ஒரு பெண்ணை பார்க்கும் போது அழகான பெண் என்று என் மனம் கருதுகிறது.அந்த பெண்ணுடன் வரும் வாலிபனை ஒரு எதிரியாக பார்க்கிறேன்.
ஆனால் உண்மையில் அந்த பெண் அழகும் அல்ல.அந்த வாலிபன் ஒரு
நல்ல குணம் படைத்தவன்.
இருவரை பற்றிய என் எண்ணமும் பார்வையும் என் கருத்தை தீர்மானிக்கிறது.
நான் ஒருவருக்கு நல்லவன்,இனி ஒருவருக்கு கெட்டவன்.ஆனால் நான் நானாகத்தான் இருக்கிறேன்.
இப்படி வேறுபட்ட கருத்துகளும் எண்ணங்களும் நம்மை தடுமாற வைக்கிறது.சம்பந்த பட்டவர்கள் தங்கள் இயல்பான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிமிடத்தில் என்னை பத்து பேர் புகழ்ந்து கொண்டு இருக்கலாம்,நூறு பேர் பொறாமை பட்டு கொண்டு இருக்கலாம்.எனக்கு தெரியாது.நான் என்னை பற்றி கவலை பட்டு கொண்டு இருப்பேன்.
கற்பனையும் எண்ணங்களும் தான் வாழ்க்கை.