STORYMIRROR

safrina noor

Inspirational

4  

safrina noor

Inspirational

இந்தியா என்னும் அன்னை

இந்தியா என்னும் அன்னை

1 min
6

அவர் காதல் கொண்டார் 
அந்த இனிமையானவர் மீது 

அவளை சில நயவஞ்சர்கள்
சிறைப்பிடித்து வைத்திருந்தார்கள் 

அவளை மீட்க தன் தாய்மொழியை துணைக் கொண்டார் 

அவளை தன்னில் சுமந்து செல்ல 
பெரும் ஆசைக் கொண்டார் 

ஒவ்வொரு நொடியும் தவம் புரிந்தார் 
அவரின் தவம் நீண்டுக்கொண்டே சென்றது 
அவரின் வாழ்வின் எல்லை வரை…

அவளை காக்க வாள் கொண்டு போராடவில்லை 

பேனா முனைக் கொண்டு போராடினார்கள் 

அவர் எழுதிய ஒவ்வொரு சொற்கள் 
ஒரு வாளாகிறது,
அவர் விதைத்த ஒவ்வொரு வரியும் 
ஒரு விதையாகிறது..

அவர்கள் எழுதிய சொற்கள் தான் 
அவர்களின் அடையாளம் 

ஒரு புறம் தாகூர் மறுபுறம் பாரதி
தாடியும் மீசையும் அவர்களின் அடையாளமல்ல

அவர்களின் சொற்கள் உலகம் அழியும் வரை உயிரோடு இருக்கும் 

அந்த சொற்கள் வெறும் சொற்கள் என்று சொல்லி அடக்க முடியாமல் 
திணறுகிறது 

எனது வாய்மொழி…


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational