STORYMIRROR

Arul (Rocky wolf)

Fantasy Thriller

4  

Arul (Rocky wolf)

Fantasy Thriller

கால சக்கரம்

கால சக்கரம்

7 mins
1

ஒரு பெண் சுடிதார் போட்டு, முட்டி போட்டு முன்னாடியும் பின்னாடியும் நாலு காளால தவழ்ந்து போய்ட்டு வராங்க, ஒரு கொழந்த சிரிப்பு சத்தம் கேட்குது, டேய் எவ்ளோ நேரம் டா நான் பண்ணனும், இன்னைக்கு தான் நீ சிரிச்சு பாக்குறோம், அதுனால, எங்க பாஸ் திரும்ப திரும்ப லூப்ல பண்ணிட்டு இருக்க சொல்றாரு.பாப்பா சிரிக்குது. அன்பு உலகம் அனாதை இல்லம்னு ஒரு board ah ரெண்டு பேரு  எடுத்துட்டு போறாங்க.
ஒருத்தர் சத்தம் கேட்குது, அண்ணா அத வெளிய மாட்டிடுங்க , சரிப்பானு வாசல் கொண்டு போறாங்க,சத்தம் வந்தது கௌதம் கிட்ட இருந்து.இடுப்புல கை வச்சுட்டு board உள்ள போற வர பாக்குறான்
கௌதம் : ஹே ஸ்ரேயா நீ என்ன லூப்ல முன்னயும் பின்னயும் போய்ட்டு வர ன்னு சிரிக்கிறான்.

பாப்பாவ காட்டி,தலைவன் சிரிக்க தான்னு ஸ்ரேயா சொல்றா.

கௌதம் : கோடி ரூபா கொடுத்தாலும் திரும்ப திரும்ப ஒன்னையே பண்ணிட்டு இருக்கறது எல்லாம் நமக்கு வேணாம் பா.

ஸ்ரேயா : வேணாம்னு சொல்றது தான் நடக்கும்.

கௌதம் : ஐயோ.

ஸ்ரேயா நிமிர்ந்து பாத்து அவன, நீயும் சுழல்ல சிக்குவன்னு சொல்றா.

கௌதம் : ஏண்டி பேயாட்டும் சொல்றனு ஓடிட்டான்.

ஸ்ரேயா சின்னதா சிரிக்குறா.

ஒரு ரூம்ல ஒரு கை ஒரு gift box ah எடுக்குது, ஒரு கை  கதவ தொறக்குது என்ன டா gift box எடுத்துட்டு போறியானு கேட்குறாரு, அவர் பேரு ராஜன்.
கௌதம் : இனி அந்த நாய்க்கு எதுக்கு gift ன்னு சொல்லிட்டு போறான்.

கௌதம் ஒரு tshirt போட்டு இருக்கான், வாய்ல cigratte, காதுல போன், தோள் பட்டையாள போன் புடிச்சுகிட்டு,குனிஞ்சிட்டு பேசிட்டு இருக்கான், டேய் gift எடுத்துட்டியாமேனு கேட்குது
கௌதம் : வேற என்ன பண்ணனும்.

ஓகே நல்லது,நாளைக்கு நாங்க காலைல விடிஞ்சதும் ரெண்டு பேரும் வரோம் உன் வீட்டுக்கு, நீ சரக்கடிக்காம தூங்குனு கேட்குது.

ஓகேனு சொல்லிட்டு சரக்க கிளாஸ்ல ஊத்துறான். போன கட் பண்ணிட்டு கிளாஸ் எடுத்து ஒரே கல்ப்ல குடிக்குறான்.

கௌதம் கண்ண முழிச்சு பாக்குறான்.
அவன் ரூமே அவனுக்கு சுத்துது, நாலு சைடுலையும் நாலு கலர்.மொதல்ல இந்த கலர மாத்தணும், நம்மளே பயப்படுறோம்னு சொல்லிட்டு tshirt ah  பெட்ல எறிஞ்சிட்டு எழுந்துக்குறான் கலர் லைட் ஆப் பண்ணிட்டு, tube லைட் போட்றான்.

கதவ தொறக்குற சத்தம் நாங்க வந்துட்டோம்னு உதயா,வெற்றி ரெண்டு பேரு. கௌதம் தூக்க கலக்குத்துல இருக்கான், வெற்றிய உன் ஆள விக்க போனியே என்னாச்சு கேட்குறான், வெற்றி ஷாக் ஆக.

உதயா : டேய் அவன் ஆள பாக்க போனான், நான் வீடு விக்க போன.

கௌதம் : சாரி கைஸ், சேத்து சொல்லிட்டன்.

வெற்றி : டேய் அந்த gift எடுத்துன்னு வந்துட்டியா.

கௌதம் : ஆமா டா வேற என்ன பண்ண சொல்றிங்க, வேலையே போ போகுது அவனுக்கு.

வெற்றி : சரி ஊர்ல என்ன நடந்துச்சுனு கேளுங்க.

கௌதம் : உன் ஆள் கூட என்ன நடந்துச்சு வேணா சொல்லு.

உதயா சிரிக்குறான்.

வெற்றி : ஊர் கத கேளு.

வெற்றி half an hour ah கைய்ய ஆட்டி பேசிட்டு இருக்கான்,கௌதம் காத கையால மூடிட்டு இருக்கான் கூட மதிக்காம.

பேசிட்டு சரி டா நாங்க கெலும்புறோம்னு சொல்றான் வெற்றி. கௌதம் கை எடுத்து கும்டுறான். போய்ட்டாங்க.

கௌதம் ஒரே எடுத்த பாத்துட்டு இருக்கான், ஒரு சத்தம் கேட்டு ஜன்னல் குள்ள ஒரு பால் வந்து அவன் தலைல அடிச்சு மயங்கிடுறான்.

ஏந்துக்குறான், ரூம் சுத்துது நாலு சைடும் நாலு கலர் லைட்.

கௌதம் எந்துருச்சு உட்கார்ந்து திரும்பவுமானு கொழம்பி பாக்குறான். கதவு தொறக்குற சத்தம் கேட்டு, நாங்க வந்துட்டோம்னு உதயா வெற்றி சத்தம். கௌதம் ஒரஞ்சு இருக்கான், gift எடுத்துட்டு வண்டியானு கேட்குறான். கௌதம் கண்ணு பெருசாகுது, ஊருக்கு போன கதைய வெற்றி சொல்லிட்டு கெலம்பிட்டான், பொறுமையா திரும்பி ஜன்னல் பாக்குறா, ஜன்னல் வழியா பால் வந்து தலையில அடிக்குது, மயங்கிட்டான். கண்ண தொறந்து பாக்குறான், ரூம் சுத்துது. வாட், நான் லூப்ல சிக்கிட்டனா, சினிமால வர மாதிரி நடக்குதுனு சந்தோஷ படணுமா, எப்படி வெளிய வரதுனு யோசிக்கணுமா, திரும்பவும், வெற்றி உதயா வருகை, திரும்பவும் தலைல பால் அடி.
இந்த வாட்டி முழிக்குறான், போய் ஜன்னல் சாத்துறான் first, வெற்றி, உதயா வராங்க
கௌதம் :நம்ம லூப்ல மாட்டிட்டோம்.

வெற்றி : போடா பைத்தியம்னு சொல்லிட்டு சிரிக்குறாங்க ரெண்டு பேரும்.

கௌதம் : சரி ஊருக்கு போய்ட்டு வந்த கதைய சொல்லு.

வெற்றி : இப்பதான் டா சொல்லணும் நினைச்சன், என் மனசு உனக்கு புரிது டா.

கௌதம் : புரியும்.

ரெண்டு பேரும் கெளம்பிட்டாங்க. ஜன்னல்ல பால் அடிச்ச சத்தம்.

நாங்க யாருனு சொல்லிட்டு சந்தோஷமா, பெட்ல இருந்து எரங்குறான். அவன் பின்னாடி ceiling fan கீழ விழ, திரும்பி அதிர்ச்சி ஆகி மயங்கிட்டான்.

திரும்பவும் கண் முழிக்குறான், சாரி இனி ஜன்னல் சாத்தல, வேற எதும் தலைல போற்றாதிங்கனு , கும்டுறான். யார பாத்து கும்டுறன் தெரில, சேவ் மீ.

முன்னாடி உதயா, வெற்றி.

உதயா : யார பாத்து டா குமட்டுட்டு இருக்கு.

கௌதம் : எழந்த உடனே கும்டுறது என் வழக்கம்.

உதயா :குடிச்சிட்டு அப்டித்தான் ஒளரணும்.

வெற்றி, ஹாங் ஓவர்னு சொல்றான். ரெண்டு பேரும் சிரிக்குறாங்க.

கௌதம் : ஏதாச்சு பேசி டாபிக்க மாத்தணுமே, ஹே வெற்றி, ரேணுகா receptionist கூட்டினு போய் சாரீ வாங்கி குடுத்தியா, உன் ஆளுக்கு தெரியாம.

உதயா : வாழ்க்கை இவன மட்டும் தான் வாழ வைக்குது.

வெற்றி : டேய் அவளுக்கு பர்த்டே, யாரும் gift குடுக்குல அதான்.

கௌதம் : அப்போ கூட யார் டா, சாரீ வாங்கி குடுப்பா.

ஒரு சத்தம் கேட்குது, பால் கெளதம் தலைல அடிக்குது.

கௌதம் எழுந்துக்குறான்,

கௌதம் : continue பண்ணுவோம், ஏன் ரேணுகாவுக்கு சாரீ எடுத்து குடுத்த.

உதயா சாரீ யா னு ஷாக் ஆகுறான்.

வெற்றி : அவ குடும்ப கஷ்டம், அதான்.

கௌதம் : அடப்பாவி answer ah மாத்திட்டான். பையன் ஏதோ சேட்டை பண்ணி இருக்கான் போல இருக்கு சரி விடு நாம கேட்க தேவ இல்லை னு.

வெற்றி : சரி அந்த கிஃப்ட்ட எனக்கு கொடுத்திருப்பா.

இவ ஏன் அந்த கிப்ட் மேலயே குறியா இருக்கான்னு தெரியல அந்த கிப்ட் எடுத்து கௌதம் பிரிச்சு பாக்குறான் பைபிள் அப்படின்னு சொல்லிட்டு கெளதம் சொல்றான்.

வெற்றி : எனக்கு பைபிள் வேணும் எனக்கு பைபிள் வேணும்.

கௌதம் : முதலில் நீ என்ன கிறிஸ்டியனா எதுக்கு பைபிள் பைபிள் அடிச்சிக்கிற இப்போ. சரி ஓகே நீ பைபிள் வேணும்னு கேட்டுட்ட அதனால வந்து இந்த seven deadly சின்ஸ், அந்த லிஸ்ட்ட சொல்றன், நம்ம எவ்ளோ உண்ம சொல்றோம்னு பாப்போம்.

வெற்றி : நான் ரெடி.

உதயா : நானும்.

பால் தலைல அடிக்குது.

கௌதம் எழுந்துருச்சு, பைபிளோட இருக்கான்

வெற்றி திரும்பவும் பைபிள்னு excite ஆகுறான், கௌதம் சிரிக்குறான், எல்லா லூப் லையும் சேம் ரியாக்ஷன்னு சொல்றான்.

கௌதம் : சின்ஸ் குள்ள போய்டுலாம், pride (பெருமை).

வெற்றி : எனக்கு ஆள் இருக்கும் போது, ரேணுகாவ உஷார் பண்ணது.

கௌதம் : இதுலாம் பெருமையா, கருமம்.

வெற்றி : ரேணுகா பாத்து ஜொள்ளு விட்டு இருக்கல.

உதயா : ஆமா.

வெற்றி : நான் அவன கேட்டான்.

கௌதம் : சரி டா எப்பா உன் பெருமைல செத்துடன்.

கௌதம் : பேராசை (greed).

வெற்றி : உன்னோட பெரிய ஆள் ஆகணும் ஆபீஸ்ல. பாஸ் நெருக்கமா உன்ன போல.

கௌதம் : ஓபனா என் கிட்டயே சொல்ற, முதல ஆபீஸ் கரெக்டா வரணும், நேரத்துக்கு வரணும், பொம்பள ஷோக்கா இல்லாம, சரி விடு, நீ நினைச்சது கண்டிப்பா நடக்கும்.

உதயா : அடுத்த ஜென்மத்துலயா.

கௌதம் சிரிக்கிறான், ஜன்னல் சத்தம்,பால் தலைல அடிக்குது.

கௌதம் முழிக்கிறான்.

அடுத்த sin, lust (kamam)

உதயா சிரிக்குறான், கௌதம் நால சிரிக்காம இருக்க முடில.

உதயா, தலைவன் அதுல தான் expert uh னு சொல்லிட்டு சிரிக்குறான்.

வெற்றி : எனக்கு மட்டும் lust இருக்க மாதிரி, நான் வரல இந்த விளையாட்டுக்குனு கோச்சிக்குறான்.

கௌதம் சிரிச்சிட்டே சரினு சொல்றான்.

கௌதம் : அடுத்த sin, பொறாமை. இரு இரு என் மேல, என் பொசிஷன் வரணும்.

வெற்றி : இல்ல, ஆதிரன் கதிர்வேல் மேல, எப்போ பாஸ்  அவனுக்கு gift கொடுக்க நினைச்சரோ.

கௌதம் : சரி விடு, அந்த பைபிள் நீ தான எடுத்துனு போற.

வெற்றி : ஹே எனக்கு கொஞ்சம் அப்செட், அவன நினைச்சதும், நீ பதில் சொல்லு, ஆனா gift என்து.

கௌதம் : hm அவன் விட்ட எடுத்துல இருந்து நான் சொல்றன். Gluttony, தேவைக்கு அதிகமா எடுத்துகிறது, நம்ம பாஸ் ஓட டைம் அதிகம் எடுத்துப்பன், அவரோட focus ஆதிரன் மேல திரும்பமா இருக்க. அவளோ நேரம் எனக்கு பேச தேவை இல்ல.

கௌதம் வெற்றிய பாக்குறான்.

கௌதம் : இதே technique ah யூஸ் பண்ணி என் எடுத்துக்கு வரலாம்னு பாக்குற.

வெற்றி சிரிக்க, உதயா சிரிக்க, கௌதம் கொண்டுருவன்னு சொல்றான். பால் பொறாமையா வருது கௌதம் தலைல அடிக்குது.

கௌதம் முழிக்கிறான், அடுத்த சின்ஸ், உதயா சொல்வான். Wrath அதீத வெறுப்பு, கோவம்.

உதயா : ஆதிரன், ofcourse. நிறைய வெறுப்பு.

கௌதம் : போட்டியோட, நிறுத்துங்க டா எதுக்கு வெறுப்பு லாம். ஓகே next sin laziness.

உதயா, வெற்றிய ஒர கண்ல பாக்குறான், கௌதம் சிரிக்குறான்.நான் ஒன்னும் lazy இல்லனு சொல்றான்.

உதயா : different question, answer ஆதிரன்னு மட்டும் கான்ஸ்டன்ட்.

கௌதம் முகம் மாறி என்ன சொன்னனு கேட்கும் போது, பால் தலைல அடிக்குது.

கௌதம் முழிக்கிறான், எதோ ஒன்னு சொல்லுது, நமக்கு புரிலனு தனுக்கு தானே பேசிட்டு இருக்கான். போன் எடுத்து பாக்குறான், ஆதிரன், நான் உன் கிட்ட பேசணும்னு மெசேஜ் பண்ணி இருக்கான்.

கௌதம் கால் பன்றான், சொல் டானு சொல்றான்.

ஆதிரன் : மச்சினு அழுவுறான். கடவுள் சத்தியமா காசு எடுக்க பாக்கல, எப்பவும் நமக்கு வர டொனேஷன்ல, நம்ம பசங்களுக்கு போக மத்த ஆஷரமத்துக்கும் காசு அனுப்புவோம்ல.

கௌதம் : ஆமா,

ஆதிரன் : நான் வளந்த அன்னை ஆஷ்ரம், ஒரு நாள் முன்னாடியே குடுக்க முடிமா கேட்டாங்க, நாளைக்கு குடுக்க போறத, முதல் நாள் குடுத்தன்
, அப்றம் பாஸ்ட்ட சொல்லிக்கலாம்னு ஆனா காச திருடிட்டேன்னு வெற்றி பேசி, என் சைடு கேட்காமலே இப்டி பண்ணிட்டான்.

கௌதம் : சாரி டா.

உதயா, வெற்றி, யார்கிட்ட பேசுறான்னு பாத்துட்டு இருக்காங்க.

ஆதிரன் : என்ன அந்த அஷ்ரம் நல்ல மனுஷனா தான் வளத்து இருக்குனு அழுவுறான், அதுக்கு கெட்ட பேரு வாங்கி தந்தா, நான் செத்துடுவன்.

கௌதம் : டேய், என்ன நம்பு, நான் பாத்துக்குறன்.

ஆதிரன் : தேங்க்ஸ் டானு அழுவுறான்.

போன் கட் பண்ணிட்டு, பெட்ல இருந்து பொறுமையா கால் மட்டும் எறுங்குது, வெற்றி கன்னத்துல தொடர்ந்து அடிச்சிட்டே இருக்கான், ஜன்னல்ல சத்தம் பால் அவன நோக்கி வருது, கோவமா பாலையே பாக்குறான், தலைல அடிச்சு மயங்கிட்டான்.

முழிக்குறான், போன் பண்ணி, காசு அன்னை இல்லம் போச்சானு பாருங்க, போய்டுச்சுனு சொல்றாங்க. அமௌன்ட் recieved னு அன்னை இல்லம் மெயில் போட்டுச்சானு கேட்குறான், ஹ்ம்ம்னு சொல்றாங்க. போன் கட் பண்ணிட்டு வெற்றி தொடர்ந்து செவுல்ல அடி அடிச்சிட்டே இருக்கான், பால் பட்டு விழுந்துட்டன்.

கண்ணு முழிக்குறான், வெற்றிய அடிச்சிட்டே இருக்கான். திரும்பவும் முழிக்குறான் வெற்றிய அடிச்சிட்டே இருக்கான், உதயா ஏன்டா அடிக்குற கோவமா கேட்குறான்.

கௌதம் : ஆதிரன் ஒரு நாள் முன்னாடி அன்னை இல்லத்துக்கு காசு அனுப்பி இருக்கான், அதுக்குள்ள திருட்டு பட்டம் கட்டிட்டான். நல்ல வேல தெரிஞ்சுது, அந்த இல்லத்துக்கும் கெட்ட பேரு, அவன் நல்ல மனுஷன் அவனுக்கும் கெட்ட பேரு, தயவு செஞ்சு இவ்ளோ வெறுப்பு ஒரு ஆளு மேல வைக்காதிங்க, எவ்ளோ பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கோம்,உன்ன நம்புனதுல.

ஜன்னல் பால் பட்ட சத்தம், பாலையே பாக்குறான் இந்த வாட்டி அவன் மேல படாம கீழ விழுந்துடுச்சு. பெட்ல பட்டன்னு உட்காருறான் லூப் முடிஞ்சுடுச்சுனு பெரு மூச்சு விட்றான். உதயா, என்ன லூப்னு கேட்குறான்.

உனக்கு புரியாதுனு கௌதம் சொல்றான். வெற்றி, சாரி மச்சான்னு கௌதம தொட்டு அழுவுறான். சரி விடுன்னு சொல்றான்.கௌதம் யாருக்கோ போன் பன்றான். கௌதம் பெட்ல உட்கார்ந்துட்டு இருக்கான், உதயா, வெற்றி செவுத்துல சாஞ்சு நின்னுட்டு இருக்காங்க, யாரும் பேசிக்கல. யாரோ கதவ தொறக்க,ஒரு ஆள் உள்ள வர,சாரினு வெற்றி அவன கட்டி புடிச்சு அழுவுறான். விடுறான்னு சொல்லி முதுகுல தற்றான்.

கௌதம் : ஆதிரன், தி gift is for யூ னு பைபிள குடுக்குறான்.

ஆதிரன்,:தேங்க்ஸ் கௌதம், யூ ஆர்  such a குட் man னு சொல்லி hug பன்றான்.

ஆதிரன் : சாரி அண்ட் தேங்க்ஸ் னு சொல்றான்.

அப்றம் நாலு பேரும் சிரிச்சு பேசிட்டு இருகாங்க. பெட்ல தொறந்து இருந்த பைபிள் fan காத்துல ஒவ்வொரு  பக்கமா திரும்புது.அதுல

Romans 12:9 reads:
​"Love must be sincere. Hate what is evil; cling to what is good." (NIV)

இது இருக்கு.



Rate this content
Log in

Similar tamil story from Fantasy