STORYMIRROR

lakshmi ramachandran70

Children

4  

lakshmi ramachandran70

Children

இட்லி சாம்பார் மக்கள்

இட்லி சாம்பார் மக்கள்

1 min
5

இரவு முழுவதும் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. கனிஷ்காவிற்கு தூக்கம் வரவில்லை. அம்மா உணவகத்தில் வாங்கி வந்திருந்த இட்லி அவளது ஒரு வயிற்றிற்கே போதவில்லை. சாலையில் கட்டியிருந்த விதவிதமான கொடிகள் அவளது ஐந்து வயது மானத்தைக் காக்க போதுமானதாக இருந்தது. பச்சை, சிவப்பு, மஞ்சள்,யானை என அவளது தம்பி அவளது உடலில் கட்டியிருந்த கொடிகளின் வண்ணங்களை வைத்து அருகிலிருந்த  நோட்டில் எழுதிக்கொண்டிருந்தான். நீ சாப்பிட்டாயா அக்கா? கனிஷ்காவிற்கு பதில் சொல்லவேண்டும் என தோன்றவில்லை. மழையில் இருந்த இரண்டு செட் பள்ளி யூனிஃபார்ம் நனைந்து விட்டதே! நாளை என்ன செய்வது! என்பதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். எர்ணாவூர் பள்ளி டீச்சர் இருக்கும்வரை துணி இருந்தால் தருவார்கள். இப்ப அந்த டீச்சரை மாற்றி விட்டார்கள். இந்த சாதி,மதம்னு யார்தான் படைத்தார்களோ தெரியலையே!! இட்லி மாவை அவித்தால் உணவு,தொட்டுக்கொள்ள சாம்பார்,அதில் உள்ள காய்கறிகளும் கலர் கலராத்தானே இருக்கு! அதில் இருப்பதுபோலத்தானே உலக மக்களும்! மதங்களும்!இதில் எங்கிருந்து வந்தார்களோ இந்த கட்சிக்காரர்கள். ஒவ்வொரு மதத்தின் பெயர் சொல்லி ஓட்டு வாங்கி வயிறு வளர்க்கும் வெற்று அரட்டைக்கூட்டங்கள். நான் படித்து வந்தேன் என்றால் கிங்மேக்கர்மாதிரிதான் இருப்பேன். நாளைக்கு கிங்மேக்கருக்கு பிறந்தநாளுன்னு டான்ஸ் ப்ரோக்ராம்னு சொன்னாங்க. உடுத்திக்க யூனிஃபார்மே இல்லை......இதில் பெட்டியில் நாய்க்குட்டிவேற இருக்கு...அதையும் மழையில் நனைய விடாமல் பாத்துக்கணும்.......ஒரு பாட்டிலுக்கு இன்னவிலைன்னு காயலான் கடையில் தர்றதை வைத்து நானும்,தம்பியும் வாழ முடியுமா? என சுவரில் மாட்டியிருந்த காந்தி படத்தைப் பார்த்து கேட்டாள். அவளது குரல் எந்த அரசியல்வாதிகளின் காதிலும் விழவில்லை. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என பக்கத்து வீட்டிலிருந்த ரேடியோ பாடிக்கொண்டிருந்தது.



Rate this content
Log in

Similar tamil story from Children