உறக்கம்
உறக்கம்
வா என்றழைத்தால் வாராது,
கண்ணாமூச்சி காட்டும்.
போ என்றால் போகாது,
வலுக்கட்டாயமாய் சூழ்ந்து கொள்ளும்.
சிறியதானாலும் சறுக்க வைக்கும்,
நீண்டாலும் பிரச்சனைக்கு உள்ளாக்கும்.
குழந்தை உள்ளத்தின் கட்டிலே மட்டும் கட்டுண்டு இருக்குமாம்,
கவலைக்கு அரு மருந்தாம் உறக்கம்.