திருமந்திரம்
திருமந்திரம்
7. முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. 7 தந்தையாகித் தாங்குவான்! பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவன் சிவபெருமான். அவனே பழமையாகச் சமமாக வைத்து எண்ணப்படுகின்ற நான்முகன், திருமால், உருத்திரன், முதலிய மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பரும் மிக்காரும் இல்லாத தலைமகன். இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.
