STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
180

1. ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் *ஏழு உம்பர்ச்

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 1   சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்தி களாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள் களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract