STORYMIRROR

somalatha seshamani

Drama Classics Others

4  

somalatha seshamani

Drama Classics Others

பொன்மகள்

பொன்மகள்

1 min
490

என் இனிய பொன்மகளே

உன்னை ஈன்றெடுத்த நாள் முதலே!

என் வாழ்வில் ஒரு பொன்னான அத்தியாயம் 

 தொடங்கியது கலைமகளே!

எத்தனை பேரின்பம்!!!

எத்தனை பரிதவிப்பு!!!

எத்தனை ஆச்சரியம்!!!

அத்தனையும் அழகான உன் பெரிய கண்களிலே!

என் வாழ்வை அழகாக்க

 நீ வந்த அந்த நிமிடம் !

என் வாழ்க்கை முழுவதிலும் மறவாத பொன்நிமிடம்!!

சொர்க்கத்தை பார்த்தேனே!

 உன்னோடு விளையாடி!!

உன் கற்பனை விளையாட்டில்!

 கரைந்தோடி போனேனே!!

முதல் மூன்று வருடங்கள்

 முழுவதுமாய் உன்னுடனே !

திரும்பினேன் மழலைக்கு 

 கிடைக்காத வரமெனக்கு!!

பள்ளிக்கு சென்று நீ 

பரிசுகள் வாங்கையிலே !

பூரித்து போனேனே

பெருமைதான் கொண்டேனே!!

என்னோடு நீ இருக்கும் 

ஒவ்வொரு நிமிடமும் 

எனை மறந்துபோனேனே!

கலைஞனாய் ஆனேனே!!

இப்போது எடுத்திருக்கும் 

இந்த கவிவேடம் யாரால்!

உனதால்தான் என்று 

இந்த உலகுக்கு சொல்வேனே!!

என் இனிய பொன்மகளே

உன்னை ஈன்றெடுத்த நாள் முதலே!

என் வாழ்வில் ஒரு பொன்னான அத்தியாயம் 

 தொடங்கியது கலைமகளே!


Rate this content
Log in

Similar tamil poem from Drama