இதழோரம்
இதழோரம்
நேரங்களால் கடந்து கொண்டே இருக்கிறேன்,
உன்னை காண ஒவ்வொரு நாளும்,
உன்னை காணாத நிமிடங்கள்,
அப்படியே உறைந்து போய் விடுகிறது,
உந்தன் சுவாசம் தென்றலாய் மீண்டும் என்னை தீண்டும் வரை...
அப்போது என்னுள் ஏற்படும் மாற்றங்களை உன்னிடம் மறைக்க முயலுகின்றேன்,
அதையும் உன் கண்கள் கண்டு கொண்டு விடுகிறது....
அதனால் உன் இதழோரம் ஏற்படும் சிறிய புன்னகை என்னை மயக்குகிறது, என்னவனே....