அமைதி
அமைதி
நான் என்னுடன் பேசும் ஒரு அழகான தருனத்தை தந்தவன் நீ.
உலகம் தூங்கும் நேரத்தில் தான் நீ விழித்து கொண்டு இருக்கிறாய்.
வருடம் முழுவதும் உழைத்தாலும் உன்னை நாட விலை இல்லையே நண்பா.
நீ எங்கும் இருக்கிறாய், உலகத்தின் பொய் சத்தத்தால் உன் அமைதி சத்தத்தை கேட்க மறக்கிறார்கள்.
பேச வார்த்தை இல்லை என்று சொல்லும் போதும் நீ தானே பேசுகிறாய்.
எல்லா உறவிலும் ஏதோ ஒரு நேரத்தில் நீ வந்து செல்கிறாய், ஹோ! அது தான் பிரிவா? இல்லை நீ கொடுக்கும் இடைவேளையா? அமைதியிலும் மதி இருக்கிறதா?