ஆரம்பம்
ஆரம்பம்
ஒவ்வொரு நாளும் அமைதியானதாக தான் ஆரம்பமாகிறது அன்றைய காலை பொழுதில்,
ஆனால் நேரம் போக போக மனமும் மாறுப்படுகிறது,
அடுத்தடுத்து நடைபெறும் சூழ்நிலைகளால்,
மனம் தன் அமைதியை இழக்க ஆரம்பித்து விடுகிறது,
இதனால் அன்றைய நாள் முழுவதும் எப்பொழுது முடியும் என்ற நினைவிலே நகர்கிறது,
இப்படியாக அந்த நாளே முடிந்து விடுகிறது வெறுமையாக,
எந்தவொரு உபயோகமும் இல்லாமல்,
கடைசியில் தோன்றுவது என்னவோ வெறுமையே,
கடைசியில் இவைகளை யோசித்தே தூக்கத்தையும் தொலைத்துவிடுகின்றோம்....