வழிகாட்டி
வழிகாட்டி
எந்தன் வாழ்வில்
துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்த போது,
மனதினில் உருவாகி இருந்த காயம்,
அதனை எவ்வாறு ஆற்றுவேன்,
எப்படி எதிர்கொள்வேன்,
எவ்வாறு வெளி வருவேன்,
என்ற பயத்தினில்,
நான் உழன்றிருந்தேன்,
அப்போது தோன்றினாய்
நம்பிக்கை என்னும் விளக்குடன்,
என்னை இத்தனை துன்பங்களிலிருந்து
வெளி கொணர,
இன்று,
என் வாழ்வின் வழிகாட்டியாகி நிற்கிறாய்.....