வாழ்க்கை
வாழ்க்கை
1 min
176
எதிர்பார்ப்புகள் மனிதனை அழித்துவிடும் அன்பும்,நட்பும் மனிதனை உயர்த்திவிடும். நட்போ,உறவுகளோ அளவுக்கு அதிகமான அன்பும்,நம்பிக்கையும் வைக்க கூடாது நமது அன்புடையவர்கள் நம் நம்பிக்கையை உடைக்கும் பொழுது நம் மனம் தாங்காது. மனம் ஒரு கண்ணாடி மாதிரி ஒருமுறை உடைந்தால் மறுபடியும் ஒட்டவைக்க முடியாது.
எவ்வித செயல்களை செய்யும் முன் அது மற்றவர்களின் மனதினை காயப்படுத்துமா என்று ஆராய வேண்டும் ஏனெனின் அது பின்னால் நமக்கு திரும்பிவிடும். நமது அன்புடையோரின் மனதினை காயப்படுத்த கூடாது இல்லையெனில் பின்னால் நாம் திருந்தி வரும் பொழுது அவர்கள் பட்ட வேதனை அவர்களை நம்மிடம் இருந்து பிரித்து சென்று விடும்.ஒருவரை நேசிக்கும் முன் யார் நம்மை உண்மையாக நேசிக்கிறார்கள் என்று புரிந்துகொண்டு நேசிக்க வேண்டும் இல்லையெனில் நமது வாழ்க்கை சீரழிந்துவிடும்.