திருக்குறள்.
திருக்குறள்.
குறள் 289:அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்மு.வ உரை:களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.சாலமன் பாப்பையா உரை:அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.கலைஞர் உரை:அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்