தாயும் தந்தையும்
தாயும் தந்தையும்
பெற்று எடுத்து உலகம் காட்டினாள் தாய்,
தன் தோள்களில் உலகில் உள்ள அனைத்து நல்லது கெட்டது சொல்லி வளர்த்தார் தந்தை.
தூய்மையான தாய்ப்பால் என் உடல் நலத்தை பலப்படுத்த
உன் வார்த்தைகள் எனக்கு லட்சியம் நோக்கி ஓட வைத்தது அம்மா,
என்னை திட்டும் போதேல்லாம் உங்கள் இருவர் மீதும் கொட்டி தீர்த்தேன் கோபத்தை,
ஆனால் என்னை திட்டினாலும் பாசத்தை பொழிந்தீர்கள் நீங்கள்,
தங்களை அன்பினால் என்னுடன் பிணைப்பேன்,
என்னை குழந்தையாக நீங்கள் வளர்க்க,
நீங்கள் குழந்தை நிலைக்கு செல்லும் போது நான் இருப்பேன் தங்களை பார்த்துக்கொள்ள.