மாற்றம்.....
மாற்றம்.....
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
எங்கெங்கோ அலைந்து,
உன்னிடம் வந்து சேர்ந்த போது,
உந்தன் ஆர்ப்பாட்டமும்,
நீரின் சலசலப்பும்,
ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும்,
உந்தன் நீரோட்டமும்,
வெள்ளையடித்தது போல் ஆங்கங்கே,
நுரைகளாய் பரவிக் கொண்டே...,
எனக்குள் மாற்றங்களையும் விதைத்து தான் செல்கிறது.....
எத்தனை துன்பங்களை மனதில் சுமந்திருந்தாலும்.....