ஒரு வேலை இல்லா பட்டதாரியின் கதை
ஒரு வேலை இல்லா பட்டதாரியின் கதை
கோசல்யா ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தாள்.
பட்டம் பெற்றதும், குடும்பத்தினர் அனைவரும்,
"இனிமேல் நல்ல வேலை கிடைக்கும்" என்ற நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், நிஜ வாழ்க்கை அதைவிட வித்தியாசமானது.
அவளுக்குத் ஆங்கிலத்தில் சுலபமாக பேச முடியவில்லை.
மேலும், அவள் படித்த கல்லூரியில் Coding பயிற்சி அளிக்கப்படவில்லை.
இதனால், அவள் பல நேரங்களில் வெறுப்பும் வருத்தமும் அடைந்தாள்.
குடும்ப தேவையைப் பூர்த்தி செய்ய, சில நாட்கள் தனது கல்விக்கு ஏற்றதல்லாத வேலைகளை செய்தாள்.
பின்னர், தனது திறனைக் கூர்மைப்படுத்த Coding பாடநெறியை (Course) எடுத்துக் கற்றுக்கொண்டாள்.
அதன் பின், ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
ஆனால் மாத சம்பளம் மிகவும் குறைவாக இருந்தது.
இதைக் கண்ட சிலர் அவளைக் கேலி செய்து,
"இப்படி குறைவான சம்பளமா? அரசு வேலைக்கு முயற்சி செய்!" என்று கூறினர்.
ஆனால், குடும்ப சூழ்நிலையால் வேலையை விட்டுவிட்டு வேறு முயற்சி செய்ய முடியவில்லை.
இருந்தாலும், கோசல்யா மனதில் ஒரு உறுதியான எண்ணம் வைத்தாள் –
"அரசு வேலைக்கும் படிப்பேன், அதேசமயம் Coding பயிற்சியையும் தொடர்வேன்" என்றாள்.
அவளைக் சுற்றியிருந்தவர்கள் கேலி செய்தும்,
அவள் ஒருபோதும் மனம் தளரவில்லை.
முயற்சியை தொடர்ந்தாள்.
இறுதியில், அவளுக்குத் தகுந்த சம்பளத்துடன் ஒரு பெரிய நிறுவனத்தில் Coding வேலை கிடைத்தது.
அதே நேரத்தில், அரசாங்க வேலைக்கும் தேர்ச்சி பெற்றாள்.
முயற்சி செய்தால் தோல்வி இல்லை.
நம் கடமைகளை விடாமல் செய்து கொண்டிருந்தால், வெற்றி நிச்சயம் நம்மை தேடி வரும்.
